Descriptions
முசலிப்பிரதேசத்தின் அரசியல் தலைமைகள் பல கட்சிகளிலும் மாகாண சபை தொடக்கம் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் வரை உள்ளனர்.
அனைவரும் பொதுவான சிந்தனையில் இப்பிரதேச அபிவிருத்தியை சிந்திக்காது கடந்த காலங்கள் தொடக்கம் இன்று வரை தன்னுடைய ஊர் தன்னுடைய ஊர் அபிவிருத்தி என்றே நூறு வீதம் சிந்திக்கத்தலைப்பட்டுள்ளனர். அது தவறல்ல இருப்பினும் முசலியின் தலைநகர் முசலியின் நகரம் என்ற சிந்தனை இல்லாதவர்களாக அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் நடந்து கொள்வதும் பொதுவான தீர்மானங்களை எடுக்க முயற்சி அற்றவர்களாக காணப்படுவது வரவேற்க்கத்தக்க விடயமல்ல.
அந்த வகையில் கடந்த காலங்களில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்த போது அவர்கள் பதவி வகித்த காலத்தில் முசலியின் ஒரேயொரு தலைநகராக திகழ்கின்ற சிலாவத்துறை நகரத்தில் அமைய வேண்டிய பொதுக்கட்டிடங்கள் அரச திணைக்களங்கள் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை அவர்கள் சார்ந்த கட்சிகளின் ஊடாகவோ அவர்களின் அதிகாரங்கள் ஊடாகவோ எடுக்கவில்லை. அதனால் திட்டமிட்ட ஒரு நகராக சிலாவத்துறை நகரத்தை அபிவிருத்தி செய்யவில்லை என்பதோடு சிலாவத்துறை நகரில் அமைய வேண்டிய முசலிக்கு பொதுவான தினணக்களங்களைக்கூட ஒரு இடத்தில் ஒழுங்காக அமைக்க எத்தனிக்கவில்லை என்பது வெள்ளிடை மலை.
பல ஏக்கர் அரச காணிகள் பொதுக்கட்டிடங்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தும் தன்னால் முடியுமான பல கட்டிடங்களை தங்கள் ஊருக்கு தங்கள் பிரதேசத்துக்கு கொண்டு செல்வதில் விடாப்பிடியாக பல காய்நகர்த்தலை செய்து முசலியின் அபிவிருத்திகளை துன்டாடி சுயநல குறிக்கோளை அடைந்துள்ளார்கள்.
அதிகாரத்தில் இருந்த அரசியல்வாதிகள் இதில் முக்கியமான விடயம் முசலியை சாராத அரசியல் செய்கின்ற கட்சிகளின் தலைவர்களுக்கு முசலி அழகாக திட்டமிட்ட அடிப்படையில் அபிவிருத்தியடைய வேண்டும் என்பதோ அல்லது முசலியின் அபிவிருத்தித்திட்டங்கள் பிரித்தாளப்பட்டு பல காரணங்களை உருவாக்கி அதனை அபிவிருத்தியடையக்கூடாது என்பதிலே தமிழ் அதிகாரிகள் பிரதேச செயலாளர் தொடக்கம் பிரதேச சபை செயலாளர் எம் வோ எச் இதுபோன்ற அதிகாரிகளின் ஆதிக்கமும் அதிகாரத்தில் இருக்கின்ற அரசியல் கட்சிகளின் தலைவர்களும் நினைத்ததை முசலி பற்றிய சிந்தனையில்லாத பொதுவான இப்பிரதேச சிந்தனையில்லாத உள்ளுர் அரசியல் பிரமுகர்கள் ஊடாக அவர்களை பொம்மைகளாக வைத்து அவர்களை சிந்திக்கவிடமால் அதிகாரம் ஆதிக்கம் செலுத்தியதால் முசலியின் அபிவிருத்திகள் பிரித்தாளப்பட்டுள்ளது என்பது பலரால் உனரப்பட்டுள்ளது.
அதற்கான சில உதாரணங்களை இங்கு பதிவிடுகின்றேன்.
MOH காரியாலயம் முசலிக்கானது இது அமைந்துள்ள இடம் சிலாவத்துறை நகரிலிருந்து 1km வெலிமேலையில் இதில் அப்பிரதேசத்தின் முக்கிய அரசியல் புள்ளியின் தலையீடு அதிகாரிகளின் ஆதிக்கம்
கமநல சேவைகள் திணைக்களம் 1990 க்கு முன்பு சிலாவத்துறையில் உள்ளது முசலியில் வடக்குப்பகுதிக்கானது இது இங்கிருந்து அகற்றப்பட்டு மரிச்சிக்கட்டியில் அமையப்பெற்றது அரசியல் உயர் மட்ட அழுத்தம் தெற்கு பொற்கேனியில் பழய இடத்தில் அமைந்துள்ளது.
பொது விளையாட்டு மைதானம் வெள்ளிமலை ஒதுக்கீடு அப்பிரதேச அரசியல் வாதிகளின் அழுத்தமும் அதிகாரிகளின் ஆதிக்கமும் அப்போதைய தவிசாளரின் கவனயீனமும்
இது இதுவரை பிரித்தாளப்பட்டு முசலியின் தலைநகர் முசலியின் அபிவிருத்தி பிரித்தாளப்பட்டு உருவாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் அதுபோன்று
நீர்பாசன திணைக்களம் வேப்பங்குளம் கூட்டுறவுக்களஞ்சிய சாலை வேப்பங்குளம் என்பன பொருத்தமானதாக அக்கிராமங்களில் அமைந்துள்ளதை ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் இது போன்று இன்னும் இப்பிரதேசத்துக்கு வரவேண்டிய கட்டப்பட வேண்டிய அரச திணைக்களங்கள் பொதுவானது தற்போது இருக்கின்ற அரசியல் அதிகாரங்கள் ஆதிக்கங்கள் ஊடாக எங்கெங்கே தலைநகரில் எல்லாக்கிராமங்களுக்கும் பொதுவாக அமையவேண்டியது எங்கெல்லாம் பிரித்து எதிர்காலங்களில் கட்டப்பட வாய்ப்புக்கள் தோன்றுமே என்றும் முசலியில் உள்ள பல கட்சிகளின் அரசியல் பிரமுகர்களின் சுயநலம் பொதுவான பிரதேச நலன் ஆசை அபிப்பிராயம் இல்லாததால் முசலியை துண்டாடி முசலியின் தலைநகர் சரியாக இருக்ககூடாது தங்கள் ஊருக்கு எதை எதை யெல்லாம் கொண்டு செல்ல எத்தனிப்பார்களோ என்றும் அதனை தமிழ் உயர் மட்ட அதிகாரிகளும் முசலியை சாராத அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகளும் விரும்புகிறார்களோ அதனை இலேசாக்க நம் மக்கள் பிரதிநிதிகள் பொருத்தமானவர் என்பது கடந்த காலங்கள் தொடக்கம் இன்றுவரை நிரூபிக்கப்பட்டு வந்து கொண்டு இருக்கின்றது. பொதுச்சிந்தனை இல்லாத பிரதேச பற்றில்லாத தானும் தனது ஊரும் என்ற சிந்தனை மாத்திரம் இருப்பவர்களுக்கு எவ்வாறு இவ்வாறான சிந்தனை வரும் இவர்களைத்தான் பல கட்சிகள் விரும்புகின்றன.
இறுதியாக கடந்த பிரதேச சபையில் பல கடைத்தொகுதிகளை ஒரே இடத்தில் பொருத்தமாக கட்டி முசலியின் தலைநகரை அபிவிருத்தி செய்ய நகரை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்காமல் இங்கு கொஞ்சமும் இன்னும் ஒருவருக்கு சிலதும் வழங்கப்பட்டு தங்கள் சுயநலங்களை நிரூபித்தவர்கள் கூட இன்று அரசியல் முக்கியஸ்தர்கள் என உலா வருகிறார்கள் தற்போது பிரதேச சபைக்கு மாகாண சபையால் ஒதுக்கப்பட்ட 250 தெருவிளக்குகள் அதிலும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு மத்தியில் ஒத்தகருத்து இல்லாத நிலை அதை பிரித்து அந்தப்பங்கை தன் ஊருக்கு கொண்டு செல்ல சன்டை நடைபெறுகின்றதோ தவிர அதில் பொதுவாக ஒரேயொரு தலைகரான முசலியின் முக்கிய நகரான சிலாவத்துறை நகரத்துக்கு குறிப்பிட்ட வீதத்தை பொதுவாக ஒதுக்கிவிட்டு மீதியை சமமாக பிரிப்பதற்க்கு விரும்பாத சிந்தனையில்லாத சமூக பற்றில்லாத இந்தப்பிரதேசத்தின் எதிர்கால கனவுகளை கவனிக்காத உறுப்பினர்களும் தலைவரும் ஏனையவர்களும் இந்தப்பிரதேசத்தை எவ்வாறு திட்டமிட்டு அபிவிருத்தி செய்யப் போகிறார்கள் என்பது யோசிக்கவேண்டிய விடயம் இது போன்று முசலியின் மக்கள் தொகையில் 90% வீதமாக இருக்கின்ற எம்மக்களுக்கு பங்கீடு செய்கின்ற போது சரியாக வழங்கப்படும் என்று தெரியாமல் வட்டார ரீதியாக விளக்குகளை பிரிக்க திட்டமிடுவது எவ்வகையில் நியாயம் அடுத்த வினா
ஏனெனில் 2 வட்டாரங்கள் அரிப்பில் இருக்கின்ற போது 20% அவர்களுக்கு ஒதுக்குகின்ற போது மேலதிகமாக சவேரியார்புறம், கொக்குப்படையான், கொண்டச்சிக்குடா, எஸ் பி பொற்கேனி, முள்ளிக்குளம், காயாக்குளி, மருதமடு போன்ற முஸ்லிம் வட்டாரங்களுக்கும் 80 % வீதத்திலிருந்து இன்னும் 20 % செல்ல வாய்ப்புன்டு வட்டார ஒதுக்கீட்டில் அந்த வட்டார உறுப்பினர் ஊடாக நிச்சயமாக இதில் முசலி முஸ்லிம்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்ற சிந்தனை கூட இல்லாத பிரதேச சபை நகரத்துக்கு குறிப்பிட்ட வீதத்தை ஒதுக்க சண்டை போடுவது எதனை நீங்கள் சமூகத்துக்காக சரியாக திட்டமிடுகின்றிர்கள் எதிர்காலத்தில் பல விடயங்கள் அபிவிருத்திகளில் இவ்வாறுதான் நடக்கும் என்பது பலரால் கவலைப்படுகின்ற விடயம்.
இவ்வாறுதான் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களோ மாகாண சபை உறுப்பினர்களாக இருந்தவர்களோ தவிசாளாக இருந்தவர்களோ ஏனைய உறுப்பினர்களோ பிரதேச அரசியல் முக்கியஸ்தர்களோ தன்னுடைய கிராமம் தன்னுடைய பிரதேசம் என்றே திட்டமிட்டார்களோ முசலியின் தலைநகர் என்ற திட்டமிட்ட சிந்தனையில் எதை செய்தார்கள் இதனை உயர் மட்ட அரசியல் தலமைகளும் அதிகாரிகளும் முசலியில் எதிர்பா்க்கிறார்கள். அதற்கு தகுதியானவர்களும் அதிகாரத்தில் உள்ளார்கள் என்பது புலனாகின்றது.
நன்றி:
ஜீ - சிலாவத்துறை