முஸ்லிம் சமூகம் விளம்பரங்களை குறைத்து கருத்திட்ட அமுலாக்கங்களில் அக்கறை கொள்ள வேண்டும்.
Not allow reviews
Descriptions
கலாநிதி அஷ்ஷைக் இனாமுல்லாஹ் மஸீகுதீன்
அன்மைக்காலமாக முஸ்லிம் சமூகம் புறக்கோலங்களிலும் காட்சிப் படுத்தல்களிலும் விளம்பரத்தனமான ஆரவாரங்களிலும் ஏனைய சமூகங்களை விஞ்சுமளவு அல்லது கரிசனை, கொள்ளச் செய்யுமளவு சிலவேளைகளில் சில தரப்புகளை ஆத்திரமடையச் செய்யுயளவு ஈடுபட்டு வருவதனை அவதானிக்க முடிகிறது.
அரசியல் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக அடிக்கல் நாட்டும் மெகா விளம்பர பொதுக்கூட்டங்களை பல மில்லியன் ரூபாய்கள் விரயத்தில் செய்வதனை முஸ்லிம் பிரதேசங்களில் அதிகம் காணுகிறோம்.
அதே போன்று மக்களது வரிப்பணத்தில் அமுலாக்கப்படும் சிறிய சிறிய கருத்திட்டங்கள் உதாரணமாக பொது மலசல கூடம் அமைத்தல், பாதை விளக்குகளை பொறுத்துதல், வடிகான்களை துப்பரவு செய்தல், ஏழை எளியோருக்கு சிறு சிறு உதவிகளை வழங்குதல் ஏன் அனர்த்த நிவாரணங்களை வழங்குதல் என சகல விதமான நடவடிக்கைகளிற்கும் அளவுக்கதிகமான பிரமாண்டமான ஆரவாரமான நிகழ்வுகளை நடத்தும் பாமரத்தனம் அதிகரித்து வருவதனை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம்.
அரசியல் வாதிகளை விஞ்சுமளவு சிவில் சன்மார்க்கத் தலைமைகளும் இஸ்லாமிய இயக்கங்களும், வக்பு நிதிகளிலும் நன்கோடைகளிலும் இயங்கும் அரசசார்பற்ற அமைப்புகளும் (ஒரு சிலதை தவிர்த்து) ஏட்டிக்குப் போட்டியான ஆரவாரங்களுடன் விளம்பரத்தனமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கால பண மற்றும் சிரம விரயங்களை மேற்கொள்வது ஆச்சரியமளிக்கிறது.
எமது தனிப்பட்ட குடும்ப வாழ்வில் புறக்கோலங்களில் நாம் தனித்துவம் கலாசாரம் என்ற போர்வைகளில் அளவுக்கதிகமான அக்கறை செலுத்துவது போன்று எமது மஸ்ஜிதுகளின் புறத் தோற்றங்களில் அளவுகடந்த ஆடம்பரங்களை புலக்காட்சிகளாக ஆரவாரமாக நாம் காட்சிப்படுத்திக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எமது ஊர் சிறியதாக இருந்தாலும் அங்கு பல மஸ்ஜிதுகள் பல அமைப்புகள் ஏட்டிக்குப் போட்டியான ஆரவாரங்களுடன் ஒருவகையான ஜாஹிய்ய வெறியுடன் வளிமண்டலத்தையே அதிரவைக்கும் ஒலி பெருக்கிப் பீரங்கிகளை பிரயோகிப்பதனையும் அதன் மூலம் ஏனைய சமூகங்களையும் மூளை முடுக்குகளிலெல்லாம் போட்டிக்கு இழுத்து விட்டிருப்பதனையும் நாம் அவதானிக்கிறோம்.
சகாத் மாநாடு, கல்விமாநாடு, ஹிஜாப் மாநாடு, ஈமான் மாநாடு இக்லாஸ் மாநாடு, இப்தார் மாநாடு, இஸ்லாஹ் மாநாடு,மஸ்ஜித் மாநாடு, வருடிந்த மாநாடு, மாதாந்த மாநாடு, பேராளர் மாநாடு....அப்ப்பா எத்தனை ஆடம்பர மாநாடுகளை நாம் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆங்காங்கே இஜ்திமாக்கள் ஒன்று கூடல்கள் தலைமைத்துவப் பயிற்சிகள் மாநாடுகள், பரிசலிப்பு பாராட்டு விழாக்கள், பாடசாலை தின பாத யாத்திரைகள் அளவு கடந்த சிரம நேர மற்றும் பண விரயங்களுடன் இடம் பெறுவதனை நாம் வாராவாரம் இன்றேல் மாதா மாதம் காணுகிறோம், சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான ஆடம்பர செலவுகள் விஷேட சீருடை ஆடை அலங்காரங்கள் அவர்களின் செயற்திட்டங்களுக்கான படஜட் வரவுசெலவையும் மிஞ்சி விடுகின்றன.
உதாரணமாக 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை ஒரு இலட்சம் ரூபாய்களில் வழங்கும் ஆரவாரமான நிகழ்விற்கு மூன்று இலட்சம் செலவாகிறது. ஏழை எளிய மாணவர்களின் புலமைப்பரிசில் சாதனைகளை ஊக்குவிக்க அல்லது பாராட்ட ஊரைக்கூட்டி உலகறியச் செய்ய பல மில்லியன் செலவில் விழாக்களும் விருந்துகளும் இடம் பெறுகின்றன.
சிரம தானமாக இருந்தாலும், அன்னதானமாக இருந்தாலும், கிண்ண தானமாக இருந்தாலும் இரத்ததானமாக இருந்தாலும் மெகா விளம்பரங்களை விஞ்ச எமது சமூகத்தை விட இந்த நாட்டில் வேறு எந்த சமூகமும் இல்லை என்றே கூற வேண்டும்.
உண்மையில் இந்த ஆரவாரங்களிற்கும் ஆடம்பரங்களிற்கும் விளம்பரங்களிற்கும் பின்னால் உள்ள உயரிய இலக்குகள் பணிகளை ஏனைய சமூகங்கள் எவ்வாறு அமைதியாக ஆரவாரங்களின்றி மிகவும் நுணுக்கமாக சமயோசிதமாக சாமர்த்தியமாக அமைதியாக திட்டமிட்டு எளிமையாக மேற்கொகின்றார்கள் என்பதனை நாம் உணர்வதில்லை.
அரசியல் கட்சிகள் ஏட்டிக்குப் போட்டியாக அடிக்கல் நாட்டும் மெகா விளம்பர பொதுக்கூட்டங்களை பல மில்லியன் ரூபாய்கள் விரயத்தில் செய்வதனை முஸ்லிம் பிரதேசங்களில் அதிகம் காணுகிறோம்.
அதே போன்று மக்களது வரிப்பணத்தில் அமுலாக்கப்படும் சிறிய சிறிய கருத்திட்டங்கள் உதாரணமாக பொது மலசல கூடம் அமைத்தல், பாதை விளக்குகளை பொறுத்துதல், வடிகான்களை துப்பரவு செய்தல், ஏழை எளியோருக்கு சிறு சிறு உதவிகளை வழங்குதல் ஏன் அனர்த்த நிவாரணங்களை வழங்குதல் என சகல விதமான நடவடிக்கைகளிற்கும் அளவுக்கதிகமான பிரமாண்டமான ஆரவாரமான நிகழ்வுகளை நடத்தும் பாமரத்தனம் அதிகரித்து வருவதனை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம்.
அரசியல் வாதிகளை விஞ்சுமளவு சிவில் சன்மார்க்கத் தலைமைகளும் இஸ்லாமிய இயக்கங்களும், வக்பு நிதிகளிலும் நன்கோடைகளிலும் இயங்கும் அரசசார்பற்ற அமைப்புகளும் (ஒரு சிலதை தவிர்த்து) ஏட்டிக்குப் போட்டியான ஆரவாரங்களுடன் விளம்பரத்தனமான நிகழ்வுகளை ஏற்பாடு செய்து கால பண மற்றும் சிரம விரயங்களை மேற்கொள்வது ஆச்சரியமளிக்கிறது.
எமது தனிப்பட்ட குடும்ப வாழ்வில் புறக்கோலங்களில் நாம் தனித்துவம் கலாசாரம் என்ற போர்வைகளில் அளவுக்கதிகமான அக்கறை செலுத்துவது போன்று எமது மஸ்ஜிதுகளின் புறத் தோற்றங்களில் அளவுகடந்த ஆடம்பரங்களை புலக்காட்சிகளாக ஆரவாரமாக நாம் காட்சிப்படுத்திக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
எமது ஊர் சிறியதாக இருந்தாலும் அங்கு பல மஸ்ஜிதுகள் பல அமைப்புகள் ஏட்டிக்குப் போட்டியான ஆரவாரங்களுடன் ஒருவகையான ஜாஹிய்ய வெறியுடன் வளிமண்டலத்தையே அதிரவைக்கும் ஒலி பெருக்கிப் பீரங்கிகளை பிரயோகிப்பதனையும் அதன் மூலம் ஏனைய சமூகங்களையும் மூளை முடுக்குகளிலெல்லாம் போட்டிக்கு இழுத்து விட்டிருப்பதனையும் நாம் அவதானிக்கிறோம்.
சகாத் மாநாடு, கல்விமாநாடு, ஹிஜாப் மாநாடு, ஈமான் மாநாடு இக்லாஸ் மாநாடு, இப்தார் மாநாடு, இஸ்லாஹ் மாநாடு,மஸ்ஜித் மாநாடு, வருடிந்த மாநாடு, மாதாந்த மாநாடு, பேராளர் மாநாடு....அப்ப்பா எத்தனை ஆடம்பர மாநாடுகளை நாம் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஆங்காங்கே இஜ்திமாக்கள் ஒன்று கூடல்கள் தலைமைத்துவப் பயிற்சிகள் மாநாடுகள், பரிசலிப்பு பாராட்டு விழாக்கள், பாடசாலை தின பாத யாத்திரைகள் அளவு கடந்த சிரம நேர மற்றும் பண விரயங்களுடன் இடம் பெறுவதனை நாம் வாராவாரம் இன்றேல் மாதா மாதம் காணுகிறோம், சில சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட நிகழ்வுகளுக்கான ஆடம்பர செலவுகள் விஷேட சீருடை ஆடை அலங்காரங்கள் அவர்களின் செயற்திட்டங்களுக்கான படஜட் வரவுசெலவையும் மிஞ்சி விடுகின்றன.
உதாரணமாக 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை ஒரு இலட்சம் ரூபாய்களில் வழங்கும் ஆரவாரமான நிகழ்விற்கு மூன்று இலட்சம் செலவாகிறது. ஏழை எளிய மாணவர்களின் புலமைப்பரிசில் சாதனைகளை ஊக்குவிக்க அல்லது பாராட்ட ஊரைக்கூட்டி உலகறியச் செய்ய பல மில்லியன் செலவில் விழாக்களும் விருந்துகளும் இடம் பெறுகின்றன.
சிரம தானமாக இருந்தாலும், அன்னதானமாக இருந்தாலும், கிண்ண தானமாக இருந்தாலும் இரத்ததானமாக இருந்தாலும் மெகா விளம்பரங்களை விஞ்ச எமது சமூகத்தை விட இந்த நாட்டில் வேறு எந்த சமூகமும் இல்லை என்றே கூற வேண்டும்.
உண்மையில் இந்த ஆரவாரங்களிற்கும் ஆடம்பரங்களிற்கும் விளம்பரங்களிற்கும் பின்னால் உள்ள உயரிய இலக்குகள் பணிகளை ஏனைய சமூகங்கள் எவ்வாறு அமைதியாக ஆரவாரங்களின்றி மிகவும் நுணுக்கமாக சமயோசிதமாக சாமர்த்தியமாக அமைதியாக திட்டமிட்டு எளிமையாக மேற்கொகின்றார்கள் என்பதனை நாம் உணர்வதில்லை.