Descriptions
- சட்டத்தரணி மர்சூம் மௌலானா,தெரிவிப்பு -
இலங்கை முஸ்லிம்களுக்கு மொழி பொருட்டல்ல”எனும் நீதியரசர் சி.வி. விக்னேஷ்வரன் அவர்களின் கூற்று என்னை வியப்பிலாழ்த்தியுள்ளது. வடமாகாண முதலமைச்சரின் அறிக்கை தமிழ்த் தேசியவாதத்தின் அடிநாதத்தையே கேள்விக்குட்படுத்துகிறது.
தந்தை செல்வாவின் தமிழ்ததேசியம் தமிழ்பேசும் மக்களுக்கான தாயகக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்னாள் நீதியரசர் மறுத்துரைக்கிறாரா என்பதை முதலில் அவர் தெளிவுபடுத்த வேண்டும். முஸ்லிம்கள் தமிழை வளர்க்கவில்லை என்று கூறுவதால் முஸ்லிம்கள் எத்தகைய தகுதியை இழக்கிறார்கள் எனும் தீர்ப்பினை அவர் அவசியம் விளக்கியாக வேண்டும். இதன் மூலம் அவர் எதனை நாடுகின்றார்?
தமிழ் முஸ்லிம் உறவு வலுப் பெற வேண்டும் என்று மிக நேர்மையாக அண்மைக்காலங்களில் குரல் கொடுத்துவரும் சித்திலெப்பை ஆய்வுப் பேரவை இது குறித்து தனது பலத்த கண்டனத்தையும் இத்தால் தெரிவித்துக் கொள்கிறது.
இனிவரும் காலங்களில் முன்னாள் முதலமைச்சரின் கருத்துக்களை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுப்பதற்கு அவரது கருத்தை அவர் வாபஸ் பெற வேண்டும்.
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை களைந்து களத்தில் நிற்க வேண்டிய பக்குவம் நிறைந்த வளவாளராகவோ நீதியரசராகவோதான் நாம் உங்களை எதிர்பார்த்தோம். ஓர் ஆன்மீக நாட்டம் கொண்ட பழுத்த ஆளுமையால் எவ்வாறு இத்தகைய பொறுப்புணர்ச்சி அற்ற விதத்தில் கருத்துக்களை விதைக்க முடியும்?
" யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது " என்று நாடாளும் மன்னனுக்கு அறிவுரை கூறிய சான்றோரின் தமிழ் இலக்கிய மரபினை நாங்கள் பேணிப் பாதுகாக்கவே முயற்சிக்கிறோம். சாத்வீகம் நிரம்பிய சைவமரபின் திராவிட உள்ளடக்கம் வல்லாதிக்க மனாபோவம் கொண்ட இந்துத்துவா சிந்தனையிலிருந்தும் முற்றிலும் வேறானது என்பதை இங்கு நான் தெளிவாகச் சுட்டிக்காட்ட விளைகிறேன்.
தென்னிந்தியாவில் மிக நேர்மையாகப் பேசப்பட்டுவரும் தமிழ்த்தேசியமும் திராவிடவாதமும் ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு எதிரானதாவே இயங்கிவரும் அதேவேளை அவ்வியங்கியல் முஸ்லிம் சமூகத்தை உள்ளடக்கிய ஒருபோராட்டமாகும். மேலும் இலங்கைச்சூழலில் அதனை கருத்துச் சிதைவின்றி முன்னெடுக்க வேண்டிய தேவையை நாம் அனைவரும் உணரத்தலைப்பட வேண்டியள்ளது என்பதை ஞாபகமூட்ட விளைகிறேன்.
பத்றுத்தீன் புலவரின் இலக்கியப்பணிகளை அன்றைய வடபுல தமிழ் இலக்கிய உறவுகள் அங்கீகரிக்க மறுத்தபோது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை நடத்த வேண்டிய தேவையினை உருவாக்கியது.
முதலமைச்சர் தமிழ்பேசும் மக்களுக்கான இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்று பேசியபோதிலும் தந்தை செல்வாவின் தந்தைமை உணர்வுடன் பேசவில்லை என்பது அவரது மொழியாடலில் தொனிக்கிறது.
உண்மையில் முஸ்லிம்களுக்கு மொழி முக்கியமல்ல என்ற அவரது வாதம் இணைந்த வடக்கு கிழக்கினை அவர் அடிப்படையில் ஆதரிக்கவில்லை என்றே கூறவேண்டும்.
ஏனெனில் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் இணைப்பு சாத்தியமில்லை என்பதை அறியாத நீதியரசர் அல்ல சி.வி.விக்னேஷ்வரன் அவர்கள்.
ஆகவே அவர் தமிழ் மக்களையும் ஏமாற்றும் அரசியல் முன்னெடுப்புக்கே தயார் ஆகிறார் என்பது புலனாகிறது.
அல்லது இத்தகைய கருத்து மோதல்களை ஏற்படுத்தி இனங்களுக்கிடையே விரிசல்களை தோற்றுவித்து மீண்டும் இனச்சுத்திகரிப்பினை நிகழ்த்தி ஒரு வன்முறை கலாசாரம் நிறைந்த ஆட்சியை நிறுவ இவர் வழிசமைக்கிறாரா என்பதே நம் கண் முன்னே விரியும் மிகப்பெரிய வினாவாகும்.
முஸ்லிம்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல என்று கூறும் இவருக்கு இலங்கையின் முதல் தமிழ் நாவல் அறிஞர் சித்தி லெப்பை படைத்த அசன்பே சரிதம் என்பது
நினைவில் இல்லையா?
2000 தமிழ் இலக்கிய நூல்களை திரட்டிய அல்லாமா உவைஸ்அவர்களை ஓரம் கட்டுவது தர்மம் ஆகுமா?பண்டாரவன்னியன் காவியத்தையும் எல்லாள காவியத்தையும்
படைத்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஒரு காவியப்புலவனாகப் புலப்படவில்லையா? காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் படைத்த பன்டாரவன்னியன் காவியத்துக்கு நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் வழங்கிய வாழ்த்துரை உதட்டளவில்தானா?
தமிழ் கற்கும் உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உசாத்துணை நூல்களை வழங்கிய பேராசிரியர் நுஃமானை இவர் ஏற்க மறுக்கிறாரா? அவலை நினைத்து உரலை இடிப்பதால் எதுவும் நன்மை நேர்ந்து விடாது.
சட்டத்தரணி மர்சூம் மௌலானா
தலைவர்
சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை
இலங்கை முஸ்லிம்களுக்கு மொழி பொருட்டல்ல”எனும் நீதியரசர் சி.வி. விக்னேஷ்வரன் அவர்களின் கூற்று என்னை வியப்பிலாழ்த்தியுள்ளது. வடமாகாண முதலமைச்சரின் அறிக்கை தமிழ்த் தேசியவாதத்தின் அடிநாதத்தையே கேள்விக்குட்படுத்துகிறது.
தமிழ் முஸ்லிம் உறவு வலுப் பெற வேண்டும் என்று மிக நேர்மையாக அண்மைக்காலங்களில் குரல் கொடுத்துவரும் சித்திலெப்பை ஆய்வுப் பேரவை இது குறித்து தனது பலத்த கண்டனத்தையும் இத்தால் தெரிவித்துக் கொள்கிறது.
இனிவரும் காலங்களில் முன்னாள் முதலமைச்சரின் கருத்துக்களை முஸ்லிம்கள் கவனத்தில் கொள்ளவேண்டுமா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுப்பதற்கு அவரது கருத்தை அவர் வாபஸ் பெற வேண்டும்.
அண்மைக்காலமாக வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் திட்டமிட்ட தமிழ் முஸ்லிம் முரண்பாடுகளை களைந்து களத்தில் நிற்க வேண்டிய பக்குவம் நிறைந்த வளவாளராகவோ நீதியரசராகவோதான் நாம் உங்களை எதிர்பார்த்தோம். ஓர் ஆன்மீக நாட்டம் கொண்ட பழுத்த ஆளுமையால் எவ்வாறு இத்தகைய பொறுப்புணர்ச்சி அற்ற விதத்தில் கருத்துக்களை விதைக்க முடியும்?
" யாரொடும் பகை கொள்ளலன் என்றபின் போரொடுங்கும் புகழொடுங்காது " என்று நாடாளும் மன்னனுக்கு அறிவுரை கூறிய சான்றோரின் தமிழ் இலக்கிய மரபினை நாங்கள் பேணிப் பாதுகாக்கவே முயற்சிக்கிறோம். சாத்வீகம் நிரம்பிய சைவமரபின் திராவிட உள்ளடக்கம் வல்லாதிக்க மனாபோவம் கொண்ட இந்துத்துவா சிந்தனையிலிருந்தும் முற்றிலும் வேறானது என்பதை இங்கு நான் தெளிவாகச் சுட்டிக்காட்ட விளைகிறேன்.
தென்னிந்தியாவில் மிக நேர்மையாகப் பேசப்பட்டுவரும் தமிழ்த்தேசியமும் திராவிடவாதமும் ஒட்டுமொத்த ஒடுக்குமுறைக்கு எதிரானதாவே இயங்கிவரும் அதேவேளை அவ்வியங்கியல் முஸ்லிம் சமூகத்தை உள்ளடக்கிய ஒருபோராட்டமாகும். மேலும் இலங்கைச்சூழலில் அதனை கருத்துச் சிதைவின்றி முன்னெடுக்க வேண்டிய தேவையை நாம் அனைவரும் உணரத்தலைப்பட வேண்டியள்ளது என்பதை ஞாபகமூட்ட விளைகிறேன்.
பத்றுத்தீன் புலவரின் இலக்கியப்பணிகளை அன்றைய வடபுல தமிழ் இலக்கிய உறவுகள் அங்கீகரிக்க மறுத்தபோது இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ஒன்றினை நடத்த வேண்டிய தேவையினை உருவாக்கியது.
முதலமைச்சர் தமிழ்பேசும் மக்களுக்கான இணைந்த வடக்கு கிழக்கு மாகாணங்கள் என்று பேசியபோதிலும் தந்தை செல்வாவின் தந்தைமை உணர்வுடன் பேசவில்லை என்பது அவரது மொழியாடலில் தொனிக்கிறது.
ஏனெனில் முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமல் இணைப்பு சாத்தியமில்லை என்பதை அறியாத நீதியரசர் அல்ல சி.வி.விக்னேஷ்வரன் அவர்கள்.
ஆகவே அவர் தமிழ் மக்களையும் ஏமாற்றும் அரசியல் முன்னெடுப்புக்கே தயார் ஆகிறார் என்பது புலனாகிறது.
அல்லது இத்தகைய கருத்து மோதல்களை ஏற்படுத்தி இனங்களுக்கிடையே விரிசல்களை தோற்றுவித்து மீண்டும் இனச்சுத்திகரிப்பினை நிகழ்த்தி ஒரு வன்முறை கலாசாரம் நிறைந்த ஆட்சியை நிறுவ இவர் வழிசமைக்கிறாரா என்பதே நம் கண் முன்னே விரியும் மிகப்பெரிய வினாவாகும்.
முஸ்லிம்களுக்கு மொழி ஒரு பொருட்டல்ல என்று கூறும் இவருக்கு இலங்கையின் முதல் தமிழ் நாவல் அறிஞர் சித்தி லெப்பை படைத்த அசன்பே சரிதம் என்பது
நினைவில் இல்லையா?
2000 தமிழ் இலக்கிய நூல்களை திரட்டிய அல்லாமா உவைஸ்அவர்களை ஓரம் கட்டுவது தர்மம் ஆகுமா?பண்டாரவன்னியன் காவியத்தையும் எல்லாள காவியத்தையும்
படைத்த காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் ஒரு காவியப்புலவனாகப் புலப்படவில்லையா? காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் படைத்த பன்டாரவன்னியன் காவியத்துக்கு நீதியரசர் சி.வி.விக்னேஷ்வரன் வழங்கிய வாழ்த்துரை உதட்டளவில்தானா?
தமிழ் கற்கும் உயர்தர மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு உசாத்துணை நூல்களை வழங்கிய பேராசிரியர் நுஃமானை இவர் ஏற்க மறுக்கிறாரா? அவலை நினைத்து உரலை இடிப்பதால் எதுவும் நன்மை நேர்ந்து விடாது.
சட்டத்தரணி மர்சூம் மௌலானா
தலைவர்
சித்தி லெப்பை ஆய்வுப் பேரவை