2018 டிசம்பர் 9ஆம் திகதி அஸ்னா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வு தொடர்பாக...
Not allow reviews
Descriptions
அஷ்ஷேய்க் கலாநிதி எஸ்.எம்.எம். மஸாஹிர் (நளீமி)
நான் உஸ்தாத் மன்சூர் அவர்களின் நேரடி மாணவன், அவரால் உருவாக்கப்பட்டவன், ASEDA வின் உறுப்பினர்களுள் ஒருவன், மஹவெளி ரீச் நிகழ்வின் மத்தியஸ்தர்களுள் ஒருவன் என்பவற்றையெல்லாம் விட்டு விட்டு, அக்குறணையின் மைந்தன் என்ற வகையில் கீழ்வரும் 10 அம்சங்களைப் பதிவிடுகின்றேன்.
1. எந்த ஒரு செயலும் கால, சூழ, சமூக நிலமைகளுக்கேற்ப திட்டமிட்டு செயற்படுத்தப்படல் வேண்டும். இன்றைய இலங்கைச் சூழல் மிகவும் சிக்கலான நிலைமையில் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாட்டில் சரியான அரசாங்கம் ஒன்று இல்லாத காலகட்டம். பிரச்சினைகளின் போது யாரை நாடுவது, யார் அதிகாரம் உள்ளவர் என்ற விடயங்கள் மயக்கமாக இருக்கின்ற காலகட்டம். இந்நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டுமா?
2. சிறுமக்கம் என அழைக்கப்படுகின்ற அக்குறணையில் ஷீஆ, வஹ்ததுல் வுஜூத் போன்ற தெளிவான வழிகெட்ட அமைப்புகள் செயற்படுகின்றன. இவற்றுக்கெதிராக AKJU காத்திரமான நடவடிக்கைகள் எடுத்ததா?
3. உஸ்தாத் மன்சூர் முன்வைப்பதாக கூறப்படுகின்ற பிக்ஹ் கருத்து வேறுபாடுகள், பிக்ஹ் நூல்களின் உள்ளடக்கம் தொடர்பான விமர்சனங்கள் அவரால் மட்டுமே முன்வைக்கப்படுகின்ற விடயங்களன்று. மாறாக இன்னும் பலர் அவரை விடவும் காரசாரமாக விமர்சித்தனர்; விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஏன் உஸ்தாத் மன்சூர் மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்?
4. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரம் உயரிய அளவில் பேணப்படுகின்ற நாடு. உஸ்தாத் மன்சூர் இந்நாட்டுப் பிரஜை என்ற வகையில் அவருக்கு கருத்துச் சொல்லும் உரிமை உண்டு. அதனை யாராலும் சட்ட ரீதியாகத் தடுக்க முடியுமா?
5. அக்குறணை இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றுக்கு அவசரமாகவும் ஆக்கபூர்வமாகவும் தீர்வுகள் தேடவேண்டி இருக்கிறது. போதைவஸ்த்துப் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், வீட்டு வன்முறை, பிழையான பொருளீட்டல் முறைகள், ஒழுக்கப் பிறழ்வான நடத்தைகள் என அவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சமூகத்தின் அத்திவாரத்தையும் இருப்பையும் ஆட்டங்காணச் செய்யும் இத்தகைய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது AKJU வின் பொறுப்பு. காத்திரமான வேலைத்திட்டங்கள் மூலம் இவற்றை அணுகாதிருப்பது முன்னுரிமை கொடுக்க வேண்டியவற்றைப் புறக்கணித்ததாக மாறாதா?
6. உஸ்தாத் மன்சூர் அவர்களின் கருத்துக்கள் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணானதாக அமைந்திருப்பின் அது அக்குறணைக்கு மட்டுமுள்ள பிரச்சினையல்ல. அவரது கருத்துக்கள் அகில இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவியுள்ளன. எனவே, அவற்றின் பாதிப்பு தேசியமட்டத்தில் வியாபித்திருப்பதால் ACJU இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால் ACJU இதில் மெளனம் சாதிப்பது ஏன்?
7. பிக்ஹ் பிரச்சினைகளையும் ஷாபிஈ மத்ஹப் நூல் விமர்சனங்களயும் பொது மக்கள் மயப்படுத்தல் உசிதமானதா? அஸ்னா பள்ளிவாசலுக்கு அந்நிகழ்வுக்காக வரும் பொது மக்கள் ஏற்பாட்டாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்களா? சமூகம் கூறுபோடப்படுவதற்கும் மோதல் நிலை ஒன்று எற்படுவதற்கும் இது காரணமாக அமைந்து விடாதா?
8. மாற்றுக் கருத்துக்களையும் சிந்தனைகளையும் எதிர்கொள்வதற்கு எத்தனையோ சாத்வீகமான வழிமுறைகள் உண்டு. உஸ்தாத் மன்சூர் நவீன சாதனங்களான Facebook, WhatsApp, CD, Website களைப் பயன்படுத்துகிறார் எனில் AKJU தனது துறைசார் விற்பன்னர்களைப் பயன்படுத்தி, அதே சமூக ஊடகங்களைப் பிரயோகித்து, இக்கருத்தை வேறுபாடுகளில் AKJU வின் நிலைப்பாட்டையும் ஷாபிஈ மத்ஹப் நூல்களின் சிறப்புத் தன்மைகளையும் கூறி, மக்களை அறிவூட்டலாம். இவ்வாறான சிறந்த மாற்று வழிகள் இருக்கும் போது வேறு வழிகளை நாடுவது பொருத்தமானதா?
9. மேலே கூறப்பட்ட எதனையும் கருத்திற் கொள்ளாது, நிகழ்ச்சியை நடாத்தியே தீருவோம் எனப் பிடிவாதமாக இருந்தால் அதனால் ஏற்படும் உடனடி விளைவுகளுக்கும் பின்னர் வரும் விளைவுகளுக்கும் AKJU வும் அஸ்னா நிருவாகமும் பொறுப்புக் கூற வேண்டும்.
10. இதன் மூலம் இந்த 21ஆம் நூற்றாண்டு மனிதனுக்கும் வாழ வழிகாட்டத் தகுதியானது இஸ்லாம் என்ற சிந்தனை பரவாது, தடுத்து நிறுத்திய குற்றத்திற்கு, AKJU அல்லாஹ்வித்தில் பதில் சொல்ல முடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவும்.
இறுதியாக உஸ்தாத் மன்சூர் என்பவர் ஒரு தனிமனிதனல்லர். அவருக்குத் துணையாக நூற்றுக்கணக்கான நளீமிகளும் புத்திஜீவிகளும் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடலாகாது.
1. எந்த ஒரு செயலும் கால, சூழ, சமூக நிலமைகளுக்கேற்ப திட்டமிட்டு செயற்படுத்தப்படல் வேண்டும். இன்றைய இலங்கைச் சூழல் மிகவும் சிக்கலான நிலைமையில் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். நாட்டில் சரியான அரசாங்கம் ஒன்று இல்லாத காலகட்டம். பிரச்சினைகளின் போது யாரை நாடுவது, யார் அதிகாரம் உள்ளவர் என்ற விடயங்கள் மயக்கமாக இருக்கின்ற காலகட்டம். இந்நிலையில் இவ்வாறான நிகழ்வுகள் நடாத்தப்பட வேண்டுமா?
2. சிறுமக்கம் என அழைக்கப்படுகின்ற அக்குறணையில் ஷீஆ, வஹ்ததுல் வுஜூத் போன்ற தெளிவான வழிகெட்ட அமைப்புகள் செயற்படுகின்றன. இவற்றுக்கெதிராக AKJU காத்திரமான நடவடிக்கைகள் எடுத்ததா?
3. உஸ்தாத் மன்சூர் முன்வைப்பதாக கூறப்படுகின்ற பிக்ஹ் கருத்து வேறுபாடுகள், பிக்ஹ் நூல்களின் உள்ளடக்கம் தொடர்பான விமர்சனங்கள் அவரால் மட்டுமே முன்வைக்கப்படுகின்ற விடயங்களன்று. மாறாக இன்னும் பலர் அவரை விடவும் காரசாரமாக விமர்சித்தனர்; விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஏன் உஸ்தாத் மன்சூர் மாத்திரம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்?
4. இலங்கை ஒரு ஜனநாயக நாடு. கருத்துச் சுதந்திரம் உயரிய அளவில் பேணப்படுகின்ற நாடு. உஸ்தாத் மன்சூர் இந்நாட்டுப் பிரஜை என்ற வகையில் அவருக்கு கருத்துச் சொல்லும் உரிமை உண்டு. அதனை யாராலும் சட்ட ரீதியாகத் தடுக்க முடியுமா?
5. அக்குறணை இன்று பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அவற்றுக்கு அவசரமாகவும் ஆக்கபூர்வமாகவும் தீர்வுகள் தேடவேண்டி இருக்கிறது. போதைவஸ்த்துப் பாவனை, சிறுவர் துஷ்பிரயோகம், வீட்டு வன்முறை, பிழையான பொருளீட்டல் முறைகள், ஒழுக்கப் பிறழ்வான நடத்தைகள் என அவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். சமூகத்தின் அத்திவாரத்தையும் இருப்பையும் ஆட்டங்காணச் செய்யும் இத்தகைய விடயங்களில் கவனம் செலுத்த வேண்டியது AKJU வின் பொறுப்பு. காத்திரமான வேலைத்திட்டங்கள் மூலம் இவற்றை அணுகாதிருப்பது முன்னுரிமை கொடுக்க வேண்டியவற்றைப் புறக்கணித்ததாக மாறாதா?
6. உஸ்தாத் மன்சூர் அவர்களின் கருத்துக்கள் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணானதாக அமைந்திருப்பின் அது அக்குறணைக்கு மட்டுமுள்ள பிரச்சினையல்ல. அவரது கருத்துக்கள் அகில இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவியுள்ளன. எனவே, அவற்றின் பாதிப்பு தேசியமட்டத்தில் வியாபித்திருப்பதால் ACJU இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஆனால் ACJU இதில் மெளனம் சாதிப்பது ஏன்?
7. பிக்ஹ் பிரச்சினைகளையும் ஷாபிஈ மத்ஹப் நூல் விமர்சனங்களயும் பொது மக்கள் மயப்படுத்தல் உசிதமானதா? அஸ்னா பள்ளிவாசலுக்கு அந்நிகழ்வுக்காக வரும் பொது மக்கள் ஏற்பாட்டாளர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பார்களா? சமூகம் கூறுபோடப்படுவதற்கும் மோதல் நிலை ஒன்று எற்படுவதற்கும் இது காரணமாக அமைந்து விடாதா?
8. மாற்றுக் கருத்துக்களையும் சிந்தனைகளையும் எதிர்கொள்வதற்கு எத்தனையோ சாத்வீகமான வழிமுறைகள் உண்டு. உஸ்தாத் மன்சூர் நவீன சாதனங்களான Facebook, WhatsApp, CD, Website களைப் பயன்படுத்துகிறார் எனில் AKJU தனது துறைசார் விற்பன்னர்களைப் பயன்படுத்தி, அதே சமூக ஊடகங்களைப் பிரயோகித்து, இக்கருத்தை வேறுபாடுகளில் AKJU வின் நிலைப்பாட்டையும் ஷாபிஈ மத்ஹப் நூல்களின் சிறப்புத் தன்மைகளையும் கூறி, மக்களை அறிவூட்டலாம். இவ்வாறான சிறந்த மாற்று வழிகள் இருக்கும் போது வேறு வழிகளை நாடுவது பொருத்தமானதா?
9. மேலே கூறப்பட்ட எதனையும் கருத்திற் கொள்ளாது, நிகழ்ச்சியை நடாத்தியே தீருவோம் எனப் பிடிவாதமாக இருந்தால் அதனால் ஏற்படும் உடனடி விளைவுகளுக்கும் பின்னர் வரும் விளைவுகளுக்கும் AKJU வும் அஸ்னா நிருவாகமும் பொறுப்புக் கூற வேண்டும்.
10. இதன் மூலம் இந்த 21ஆம் நூற்றாண்டு மனிதனுக்கும் வாழ வழிகாட்டத் தகுதியானது இஸ்லாம் என்ற சிந்தனை பரவாது, தடுத்து நிறுத்திய குற்றத்திற்கு, AKJU அல்லாஹ்வித்தில் பதில் சொல்ல முடியுமா என்பதையும் சிந்தித்துப் பார்க்கவும்.
இறுதியாக உஸ்தாத் மன்சூர் என்பவர் ஒரு தனிமனிதனல்லர். அவருக்குத் துணையாக நூற்றுக்கணக்கான நளீமிகளும் புத்திஜீவிகளும் பல்லாயிரக்கணக்கான பொது மக்களும் இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடலாகாது.