Descriptions
நாடு மிகவும் இக்கட்டான காலகட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது பயங்கர போதை பொருள் கடத்தல் வலைபின்னல் கண்டுபிடிக்கப்பட்டு அதற்குப் பின்னால் உள்ள அரசியல்வாதிகள் யார் என்பதை அறிந்து கொள்ள நாடு ஆர்வமாக உள்ளது .
இந்த நிலைமையில் அந்த பயங்கர போதை பொருள் கடத்தல் கும்பல் அவர்களுக்கு பின்னால் உள்ள சக்திகள் எந்த வகையிலாவது இதனை திசை்திருப்ப சந்தர்ப்பம் கிடைக்குமா என்று இருக்கின்ற போது நாங்களாக சில விடயங்களை இந்த நாட்டில் உருவாக்கி நல்ல விடயங்களை தடை செய்யக்கூடாது
இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் என்றும் காணாத பல சோதனைகளை கடக்கும் காலகட்டமாக இந்த காலகட்டம் பார்க்கப்படுகின்றது .எமக்கு முன்னால் பல சவால்கள் திட்டமிட்டு பின்னப்படுகின்றன. எமது இளைஞர்கள் சற்றும் பொறுப்பின்றி நடக்கின்றனர் .
அவர்கள் விடுகின்ற ஒரு சிறிய தவறையும் மிக பூதாகரமாக காட்டி நாட்டில் ஒரு சிங்கள முஸ்லிம் கலவரத்தை உருவாக்கி அதில் குளிர்காய நினைக்கும் சில சக்திகள் சில ஊடகங்களை மிகவும் திட்டமிட்டு பயன்படுத்தப்படுகின்றன .ஆனால் அந்த சவாலை எதிர்கொள் தேவையான சக்தி எமது முஸ்லிம் சமூகத்தில் இல்லை .
மிகவும் சிறுபிள்ளைத்தனமாக ஒருவரையொருவர் குற்றம்சாட்டி நடந்து கொள்கின்றனர். பிரச்சினையின் ஆழத்தை கொஞ்சம் கூட புரிந்து கொள்ளாமல் அறிக்கை விடுகின்றனர்
ஒரு பௌத்தர் அல்லது இஸ்லாமியர் அல்லது இந்த்அல்லது கிறிஸ்தவர் யாரும் தவறு செய்யலாம் ஆனால் நாட்டு சட்டம் அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் .
மாறாக அந்த குறிப்பிட்ட சமூகத்தை அந்த சமூக தலைவர்களையோ அந்த சமூக நிறுவனங்களை யாரும் குறை கூறுவதில் எந்த பயனுமில்லை இந்த நாட்டில் சட்டம் ஆட்சி செய்ய வேண்டும் சட்டம் குற்றம் செய்பவர்களுக்கு உரிய தண்டனையை வழங்க வேண்டும் .
மாறாக ஊடகங்கள் மிகப் பயங்கரமாக ஒரு சமூகத்தின் மீது தொடராக குற்றம்சாட்டுவது நிறுத்திக் கொள்ள வேண்டும் இந்த ஊடகங்களுக்கு எதிராக முஸ்லிம்கள் கிளர்ந்தெள வேண்டிய காலம் வந்துவிட்டது.
ஒரு வீட்டில் ஆயுதம் கைப்பற்றப்பட்டதாக கூறி அந்த வீட்டில் பாவிக்கும் அன்றாட பாவனை பொருட்களையும் ஆயுதங்களாக சித்தரிக்கும் பயங்கரம் இந்த நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றது.
உண்மையில் முஸ்லிம்களாகிய நாங்கள் இந்த ஊடக பயங்கரவாதத்தை எதிர்கொள்ள தயாராக வேண்டும் .நாம் ஒரு பலமான ஊடகத்தை நோக்கி நகர வேண்டும்.
இந்த இடத்தில் ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் எந்த ஒரு சமூகத்தினதும் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் செயற்பாடுகளை செய்யக்கூடாது. .நாங்கள் செங்கல்லாக பார்க்கும் ஒரு விடயம் அவர்களுக்கு ஒரு புனிதப் பொருளாக இருக்கும். அது அவர்களுடைய மத நம்பிக்கை அதனை நாங்கள் மதிக்க வேண்டும். இலங்கையின் பௌத்த கலாசாரத்தை எமது இளைஞர்கள் விளங்கிக்கொள்ளவில்லை அதனாலேயே தொடராக தவறுகின்றனர்.
எனவே இலங்கையில் உள்ள இஸ்லாமிய புத்திஜீவிகள் சிவில் சமூக அமைப்பினர் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் கற்பிப்பதற்கு ஒரு மிகத் தெளிவான திட்டத்தை வரையறை செய்து கொள்ள வேண்டும் பௌத்த கலாசாரத்தை தெளிவாக எமது இளைஞர்களுக்கு அறிவூட்டும் வரை அவர்களது புராதன நிலையங்களுக்கு சுற்றுலா செல்வதை எமது தலைமைப்பீடம் தடை செய்ய வேண்டும்
இளைஞர்களே ! நாட்டில் எவ்வளவு அழகான பிரதேசம் இருக்கின்றன. இந்த நாடு அழகிய நாடு அந்த இடங்களுக்கு தாராளமாக சுற்றுலா செல்லுங்கள் .மிகவும் பண்பாடாக நடந்து கொள்ளுங்கள் ஆனால் எந்தவொரு சமூகத்தினரும் பண்பாடுகளை பாதிக்கக்கூடிய வகையில் நடந்து கொள்ளக்கூடாது ஏனெனில் மிகவும் துரதிஷ்டவசமாக நீங்கள் விடுகின்ற சிறிய தவறையும் மிகப்பெரிய தவறாக பூதாகரமாக்கி மிகப்பெரிய பிரச்சினை உருவாக்குவதற்காக ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கின்றது அந்த கூட்டம் மிக பயங்கர ஊடகங்களை தமது கையில் வைத்துக் கொண்டு முழுமையாக உங்களை நோக்கி பல குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர். அந்தக் குற்றச்சாட்டுகளை உண்மைம்படுத்தி.நீங்கள் எங்கள் சமூகத்தை அழிக்கும் கருவிகளாகி விடாதீர்கள்.
இலங்கையின் சமய தலைமைத்துவத்திற்கும் மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது .குறிப்பாக இளைஞர்களை பயிற்றுவிப்பதற்கான தெளிவான கொள்கை வகுக்கப்பட வேண்டும் அது முஸ்லிம்களுக்கு மாத்திரம் பொதுவான பிரச்சினை அல்ல மாறாக எல்லா சமூகத்திலும் உள்ள இளைஞர்களை வழிப்படுத்த வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது ஏனெனில் சமூகத்தில் பிரச்சினைய உருவாக்குவதில் இளைஞர்களுக்கு பெரும் பங்களிப்பு இருக்கிறது இளைஞர்களை மிகச்சரியாக வழிப்படுத்தாத போது நாட்டில் பெரும் பிரச்சினை உருவாகின்றன. அது மத தீவிரமாக இருக்கலாம் போதைப்பொருள் கடத்தல் ஆக இருக்கலாம் இவை எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பவர்கள் இளைஞர்கள் எனவே அரசும் சமயத் தலைவர்களும் சிவில் சமூக அமைப்புகளும் இளைஞர்களை மிகத்தெளிவாக பயிற்றுவிப்பதற்கான ஒரு கொள்கையை தயார் செய்து அந்த ஆவணம் நாட்டினுடைய தேசிய ஆவணமாக மாற்றப்பட்டு சகல மட்டங்களிலும் பாடசாலைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் பள்ளிவாயல்கள்,கோயில்கள் ஆலையங்களில். எல்லாவற்றிலும் இந்த பயிற்றுவித்தல் ஆரம்பிக்கப்படவேண்டும்
இந்த நாட்டின் பண்பாடுகளையும் இந்த நாட்டில் சொத்துக்களையும் இந்த நாட்டின் புராதன அம்சங்களையும் மதிக்கின்ற ஒரு பரம்பரையை உருவாக்க நோக்கம் கொண்டதாக அந்த இளைஞர் பயிற்றுவிப்பு கொள்கை அமைய வேண்டும்.
முஸ்லிம் சமூகத்திலுள்ள சிலர் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர் இந்த பிரச்சினைகளை உண்மையான ஆழத்தை கண்டறிந்து அதற்கான தீர்வுகளை தேடுவதில் அவர்கள் காலத்தை கழிப்பதில்லை சிலர் தீர்வுகளை விரும்புவதுமில்லை .
சிலருக்கு இவ்வாறான விடயங்களை அலசுவதும் ஆராய்வதும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் அலாதியான இன்பம் இருக்கிறது இவர்களே சமூகத்துக்கு மிகப்பெரிய ஆபத்தானவர்கள் பிரச்சினையை பிரச்சினையாகப் பார்க்க வேண்டும் பிரச்சினையை தீர்ப்பதற்கு மிகச் சரியான வழிமுறை எது என்பதை அமர்ந்து உட்கார்ந்து சகல தரப்பும்,
தங்கள் கொள்கைகளை மறந்து மிகச்சிறந்த ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ளாவிட்டால் இந்த நாட்டில் எல்லா சமூகங்களுக்கும் பிரச்சினைக்குரிய சமூகமாக முஸ்லிம் சமூகம் மாறிவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை
ஆக்கம்: என்.எம். முகமட்